1.தொல்காப்பியம், இஃது ஜமதக்கினிமஹாரிஷியின் புத்திரரும், அகஸ்திய மஹாரிஷியின் முதன் மாணாக்கருமாகிய திரணதூமாக்கினி யென்னுமியற் பெயரையுடைய தொல்காப்பிய மகாரிஷியினால் அருளிச்செய்யப்பட்டது. இதில் முதலாவது - எழுத்ததிகார மூலமும் மதுரை ஆசிரியர் பாரத்துவாசி நச்சினார்க்கினியரால் அருளிச்செய்யப்பட்ட வதனுரையும், கரலிகிதங் களாலாய வழுக்களை நீக்கி யச்சிட்டுத் தருகவெனச் சில வித்துவான்கள் கேட்டுக் கொள்ளக் கனம் பொருந்திய கம்பேனியாரால் ஏற்படுத்தப்பட்ட யூநிவர் சிட்டியென்னுஞ் சகல சாஸ்திரசாலைத் தமிழ்த்தலைமைப் புலமை நடாத்திய மழைவை மகாலிங்கையரவர்களால் பலபிரதிகளைக் கொண்டாராயப்பட்டுத் திருவண்ணாமலை வீரபத்திரையரால் தமது கல்விக்கடல் அச்சுக் கூடத்திற் பதிப்பிக்கப்பட்டன. சரியான பிலவங்க வருடம், ஆவணி மாதம் 1847.
2. தொல்காப்பிய நன்னூல் : இதனுள் தொல்காப்பியமும் நன்னூலும், தம்முள் ளொற்றுமை வேற்றுமைகள் விளங்க, ஒருபான்மை உதாரண சகிதமாய்ச் சூத்திரசம்பந்தத்துடனே அச்சிடப்பட்டிருக்கின்றன. இந்நூல், ஐந்திரபாணிநீயம் என்றும் சமரசபாஷிய சித்தாந்தம் என்றும், இனிப்பெயர் பெறும் பெற்றிக்கேற்ப உத்தேசித்து, வடமொழி வழக்கும் தமிழ்மொழி வழக்கும் ஐங்கிலிய வழக்குங் கொண்டிருக்கின்ற சம்பந்தா சம்பந்தங்களைக் காட்டிப் பூரணவிருத்தியா யெழுதப்புகுந்திருக்கு முரை நூலுக்கு, முதற்பிரயத்தனம். இப்பதிப்பு இ சாமுவேல் பிள்ளையினால், வால்ற்றர் ஜாயீஸ் துரையவர்களுதவியைக் கொண்டு நிறைவேறியது. நூற்பயன்: இத்தேசத்தாரிடத்தில் ஐங்கிலிய துரைத்தனத்தார் கல்வி விருத்தி பண்ணி வருமுயற்சியினால், இனித்தமிழ்நாட்டின் நன்மைக்கென்று புது நூலியற்று வோர்க்குப் பாஷைநடைகளின் பேதாபேதக்கி யானத்திற்கு வேண்டிய, தெளிவு இஃது, 1858ஆம் வருடம் சென்னை மாநகரம், கிறிஸ்து மதக்கியான விளக்கச்சங்கத்தார் அச்சுக் கூடத்தில் கானர்துரை யவர்களால் பதிப்பிக் கப்பட்டது.